'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது –
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..
ரசித்த சில கவிதைகள்
இங்கு இடப்பட்டிருக்கும் கவிதைகள் யாவும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இவை உங்களையும் கவரலாம்..! படித்துப் பாருங்களேன்..!
வழமையான செய்திகள்
மனித நேயம் எங்கோ
பதுங்கிக்கொண்டபோது – வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன
தொடர்ந்து வாசிக்க
ஒரு ஞாயிறு மாலை
ஒரு ஞாயிறு மாலை ய(ஜ)ன்னல் அருகிலிருந்து அ(ஆ)ப்பிள் மரத்தில் அணில் கோதும் அழகில் லயித்து இருந்தேன்
சின்ன உடலில் என்ன வேகம் சிலிர்ப்பும் வாலின் விசுக்கலும் விடுவிடென அங்குமிங்கும் நோக்கலும் செயலில் முனைப்பும்
ஒரு சில கொறிப்பின் பின் பயனற்ற உதிர்வில் எத்தனை பிஞ்சுகளோ…?
தொடர்ந்து வாசிக்க
தரிசனம்
நிலாவைக் காட்ட நீண்டது விரல்
எவ்வளவு அழகான விரல்’ என்றான் ஒருவன்
‘நகம் முத்துச்சிப்பியைப்போல் இருக்கிறது’ என்று கவிதை புனைந்தான் ஒருவன்
தொடர்ந்து வாசிக்க
உறைந்த நினைவுகள்
மலரென்று உனை எண்ணி மனதினில் வைத்திருந்தால்
பிரிவென்று வரும்போது பெருந்தணலாய்ச்சுடுகின்றாய்
கூடி இருக்கையிலே குளிர்நிலவாய்த்தானிருந்தாய்
தொடர்ந்து வாசிக்க